Designed & Developed by: DMK ITWING
EXPERIENCE MADE WITH PEACH WORLDS
Mongol Invasion of Europe — 1241-42
SCROLL TO START EXPERIENCE
திருவள்ளுவர் சிலை அமைப்பு!
திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
திருவள்ளுவர் சிலை உருவான கதை! 
முக்கடல் சூழும், இந்தியாவின் தென்முனையாம் தமிழ்நாட்டின் எல்லையில் குமரிக் கடற்கரையில், 01.01.2000 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
முக்கடல் சூழும், இந்தியாவின் தென்முனையாம் தமிழ்நாட்டின் எல்லையில் குமரிக் கடற்கரையில், 01.01.2000 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. 
மேலும் படிக்க
திருவள்ளுவரும், தி.மு.கழக அரசும்!
பேருந்துகளில் திருக்குறள் முதல் குமரியில் சிலை வரை என்றென்றும் வள்ளுவரை போற்றும் அரசாக தி.மு.கழக அரசு திகழ்ந்து வருகிறது.
பேருந்துகளில் திருக்குறள் முதல் குமரியில் சிலை வரை என்றென்றும் வள்ளுவரை போற்றும் அரசாக தி.மு.கழக அரசு திகழ்ந்து வருகிறது.
மேலும் படிக்க
திருக்குறளின் பெருமைகள்! 
உலக மொழிகளில் கிறிஸ்தவ மறைநூலான பைபிளுக்கு பிறகு அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நூலாக திருக்குறள் திகழ்கிறது.
மேலும் படிக்க
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா குறித்து
முத்தமிழறிஞர் கலைஞர்! 
சிலை திறப்பதற்கான பொத்தானை அழுத்தியபோது என் விரல் என்னையறியாமல் அசைவற்றுப் போனது மட்டுமல்ல! என்னையே நான் மறந்துவிட்டேன். 
மேலும் படிக்க
Designed & Developed by: @DMKITWing
EXPERIENCE MADE WITH PEACH WORLDS
Artwork by Joseph Feely

கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு ஆழிசூழ் உலகு உள்ளவரை நிலைத்திடும் வகையில், சிலை அமைத்து 01.01.2000 அன்று திறந்து வைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

கடல்மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையின் மேல், 133 அடியில் 7000 டன் எடையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, 3681 மிகப்பெரிய கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் பீடம், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும்இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலை என, திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டது. 
Artwork by Joseph Feely

குமரிக் கடற்கரையில், தமிழ்மறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்திட 31.12.1975 ல் கழக அமைச்சரவையில், முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த முப்பதே நாட்களில் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டது.

பின்னர் வந்த ஆட்சிகளில் சரியான முயற்சிகள் இல்லை –1979ல் அடிக்கல் மட்டும் நடப்பட்டது. பணிகள் நடைபெறவில்லை. அடிக்கல் நட்டு 10 ஆண்டுகள் கழித்து, 1989இல் 3’வது முறையாக கழக ஆட்சி அமைந்தபிறகு, 1990ஆம் ஆண்டு, குமரிக்கடல் ஓரத்தில் வள்ளுவர் சிலை நிறுவும் பணியை, உளி கொண்டு செதுக்கித் தொடங்கி வைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

1991ல் தி.மு.க. ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. அடுத்து முனைப்பான முயற்சிகள் இல்லாததுடன், பணிகளும் முடக்கிப் போடப்பட்டு விட்டன. 1996இல் 4’வது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர், திருவள்ளுவர் சிலைக்கானப் பணிகளை விரைவுபடுத்தினார்.  
Artwork by Joseph Feely
சட்டமன்றத்தில் திருவள்ளுவர் படம் வைக்க வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்ததோடு, அரசுப்பேருந்துகளில், அரசு அலுவலங்கங்களில் திருக்குறளை இடம்பெற வைத்தவர் கலைஞர்.

திருவள்ளுவர் நாள் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு கணக்கை நடைமுறைப்படுத்தியதோடு, திருக்குறளுக்கு உரையும், குறளோவியமும் தீட்டியவர் கலைஞர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் எழில்மிகு வள்ளுவர் கோட்டம், காவல்துறை பதக்கத்தில் வள்ளுவரின் திருவுருவம், மயிலாப்பூர் வள்ளுவர் கோவில் சீரமைப்பு, திருவள்ளுவர் ஓவியம் தீட்டிய வேணுகோபால் சர்மாவுக்கு நிதி, தில்லி தமிழ்நாடு இல்லத்தில் திருவள்ளுவர் சிலை, தில்லி தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் கலையரங்கம், ஆண்டுதோறும் திருவள்ளுவர் விருது, குமரியில் வள்ளுவர் சிலை என வள்ளுவரை போற்றும் அரசாக தி.மு.கழக அரசு திகழ்ந்து வருகிறது.
Artwork by Joseph Feely

குறள் வெண்பா எனும் இலக்கணத்தின் அடிப்படையில் சின்னஞ்சிறிய இரண்டடிகளில் வாழ்வுக்கு தேவையான கொள்கைகளை வகுத்துத் தந்துள்ள திருக்குறளை, உலகப் பொதுமறை, தமிழ்மறை, பொய்யாமொழி, தெய்வநூல், முப்பால்நூல், உத்தரவேதம், வாயுறை வாழ்த்து என பல்வேறு பெயர்களில் சான்றோர்கள் அழைக்கிறார்கள்.

உலக மொழிகளில் கிறிஸ்தவ மறைநூலான பைபிளுக்கு பிறகு அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நூலாக திருக்குறள் திகழ்கிறது.

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
Artwork by Joseph Feely

01.01.2000 அன்று இரவு ஏழரை மணிக்கு அய்யனின் சிலை, ஒளி வெள்ளத்திரை கொண்டு திறக்கப்பட்ட காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயினர் அனைவரும்.

சிலை திறப்பதற்கான பொத்தானை அழுத்தியபோது என் விரல் என்னையறியாமல் அசைவற்றுப் போனது மட்டுமல்ல! என்னையே நான் மறந்துவிட்டேன். அந்த அளவுக்கு மெய் மறந்து போயிருந்தேன்.

அய்யன் திருவள்ளுவருக்கு, 25 ஆண்டுகால பெருமுச்சுக்குப் பிறகு சிலை அமைந்தது! அதைத் திறந்து வைக்க எனக்கு ஆயுளும் இருந்தது என்கிறபோது, என் மனநிலையை வர்ணித்திட தமிழ்த்தாய், தன்னிடமும் சொற்களுக்குப் பஞ்சமென்று சொல்லிவிட்டாளே! நான் என்ன செய்ய!
EN
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
- திருவள்ளுவர்
0%